2010/07/02

காலிறுதியில் வென்றால் 14மில்லியன் டாலர்!

இன்று உலககிண்ணத்தின் கால் இறுதி ஆட்டங்கள் ஆரம்பமாக உள்ளன. மில்லியன் கணக்கிலான பார்வையாளர்கள், தொலைக்காட்சி நேரலை உரிமங்களுக்கான கட்டணங்கள், மற்றும் விளம்பரங்கள் என பலவழிகளில் கால்பந்தாட்ட சங்கங்களின் அனைத்துலக சம்மேளனம் (FIFA) பெருமளவு பணத்தொகையை வருமானமாக ஈட்டுகிறது. இதில் கணிசமான பங்கு போட்டிகளில் பங்கு கொள்ளும் அணிகளுக்கு வழங்கப்படுகின்றன. சகல அணிகளும் தாங்கள் வெற்றிகொள்ளும் போட்டிகளின் அடிப்படையில் பரிசுத்தொகையைப் பெற்றுக்கொள்கின்றன. அவ்வகையில் இம்முறை அணிகள் பெரும் தொகைகளின் விபரங்கள் வருமாறு:
  • போட்டியில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 மில்லியன் டாலர்.
    (32 x $1,000,000)
  • முதல் சுற்றில் வெற்றி பெறும் 16 அணிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் 8 மில்லியன் டாலர். (16 x $8,000,000)
  • அரைக்கால் இறுதியில் வெற்றி பெறும் 8 அணிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் 9 மில்லியன் டாலர். (8 x $9,000,000)
  • கால் இறுதியில் வெற்றி பெறும் 4அணிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் 4 மில்லியன் டாலர். (4 x $14,000,000)
  • நான்காவது இடம் பெறும் அணிக்கு 18மில்லியன் டாலர் .
  • மூன்றாவது இடம் பெறும் அணிக்கு 20மில்லியன் டாலர்.
  • இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 24மில்லியன் டாலர்.
  • முதலாவது இடம் பெறும் அணிக்கு 30மில்லியன் டாலர்.
ஆக மொத்தம் 420 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகையாக இப்போட்டியில் பங்குபெறும் அணிகள் பெற்றுக்கொள்கின்றன.

உலககிண்ணப்போட்டிகளில் பங்கு கொள்ளும் அணிகள் ஒவ்வொன்றுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகைகள் மிகப்பெரியவை. பங்கு கொள்ளும் அணிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகள் ஊக்குவிப்பாக வழங்கும் தொகைகள் இக்கணக்குகளில் அடங்கவில்லை.


No comments: