2010/07/18

மறக்க முடியாத தருணம்-போர்லன்


(நன்றி:வீரகேசரி.18.7.2010)

2010/07/14

உலககிண்ணம் 2010 முக்கிய அம்சங்கள்

  1. ஆபிரிக்க கண்டத்தில் முதலாவது உலககிண்ணப் போட்டி
  2. பங்கு கொண்ட நாடுகள் 32 நடைபெற்ற போட்டிகள் 64.
  3. அடிக்கப்பட்ட கோல்கள் மொத்தம் 145 (உலக சாதனை 171/1998)
  4. கோல்கள் சராசரி ஒரு போட்டிக்கு 2.27
  5. எதிரணிக்கு கூடுதலாக கோல்களை விட்டுக்கொடுத்த அணிகள் வடகொரியா 12, தென் கொரியா 8 உருகுவே 8
  6. எதிரணிக்கு குறைவாக கோல்களை விட்டுக்கொடுத்த அணிகள் : சுவிச்சர்லாந்து 1, போர்த்துக்கல் 1
  7. அதிக கோல் அடித்த நாடு (1)ஜேர்மனி 16 (2)நெதர்லாந்து 12 (3) உருகுவே 11
  8. அதிக கோல்களுக்கு எத்தனித்த நாடு(TOTAL SHOTS) (1)ஸ்பானியா 121 (2) ஜேர்மனி 102, (3)உருகுவே 102தடவைகள்
  9. கோல் கம்பங்களுக்கு நேராக (SHOTS ON GOALS)அதிக கோல்களுக்கு எத்தனித்த நாடு ஸ்பானியா 46 உருகுவே 46 ஜேர்மனி 42முறை
  10. கோல் எதுவும் அடிக்காத நாடுகள்:அல்ஜீரியா, ஹொண்டூராஸ்
  11. முதல் கோலை அடித்தவர் தென் ஆபிரிக்காவின் ஷிபிப் ஷபலாலா, இறுதிக்கோலாக உலகக்கிண்ணத்தி வென்ற கோலை அடித்தவர் ஸ்பானியாவின் இனிஎஸ்ரா.
  12. அதிக மஞ்சள் அட்டை பெற்றது- நெதர்லாந்து 22
  13. அதிக அட்டைகள் காட்டப்பட்ட போட்டியாக இறுதிப்போட்டி அமைந்தது. 12 மஞ்சள் அட்டைகளும் 1 சிவப்பு அட்டையும் காட்டப்பட்டது. நடுவர்: WEBB/இங்கிலாந்து
  14. அதிக சிவப்பு அட்டை பெற்றது-அவுஸ்திரேலியா 2
  15. எவ்வித அட்டைகளும் காட்டப்படாத ஆட்டங்கள்(1)வடகொரியா எதிர் ஐவரி கோஸ்ற்(2)ஜேர்மனி எதிர் ஸ்பானியா-அரையிறுதி
  16. அதிக ஆட்ட நாயகன் விருது (MAN OF THE MATCH)-வெஸ்லி சினைடர் நெதர்லாந்து.
  17. பந்தினை அதிகமுறை தொட்டவர்கள்(HAND BALLS) நெதர்லாந்து-10 சிலி 8 முறை
  18. தனது பக்கத்துக்கே (OWN-GOALS)கோலடித்தவர்கள் (1)அக்கர்/டென்மார்க்(2)சு-யன்/தென்கொரியா
  19. போட்டிகளில் தண்டனை உதை(PENALTY) 15முறை. அதன்மூலம் அடிக்கப்பட்ட கோல்கள் 9
  20. ஒரு போட்டியில் அதிக கோலடித்தது போர்த்துக்கல். 7. வடகொரியாவுக்கு எதிராக
  21. அதிவிரைவாக கோலடித்தவர்: முல்லர் ஜேர்மனி -ஆர்ஜன்ரீனாவுக்கு எதிரான போட்டியில் 2நிமி.38 வினாடியில்
  22. அதிக கோல்களை அடித்தவர்கள் நால்வர்(1)Villa/ஸ்பானியா 5 (2)Sneijder/நெதர்லாந்து 5 (3)Forlan/உருகுவே 5 (4)Muller/ஜேர்மனி 5
  23. அதிக கோல்களை அடித்த நால்வருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன (1)தங்கப்பந்து Forlan/உருகுவே (2)சிறந்த இளவயது வீரன், தங்கப்பாதணி என இருவிருதுகள் Muller/ஜேர்மனி (3)வெள்ளிப்பந்து Sneijder/நெதர்லாந்து (4)வெண்கலப்பந்து Villa/ஸ்பானியா
  24. அதிக பந்துப் பரிமாற்றம்(PASES): ஸ்பானியா 3803, ஜேர்மனி 2865, நெதர்லாந்து 2665, உருகுவே 1890 (தலா 7 போட்டிகளில்)
  25. அதிக விதிகளை மீறிய விளையாட்டு(FOULS) நெதர்லாந்து 126. சராசரியாக ஆட்டத்துக்கு 18
  26. அதிகமுறை பக்கம் மேவியவர்கள் (OFF SIDES)நெதர்லாந்து 29 ஜேர்மனி 23 உருகுவே 20

விழாக்கோலம் பூண்டது மாட்ரிட்

லகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் முதன்முறையாக ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால் தலைநகர் மாட்ரிட் விழாக்கோலம் பூண்டுள்ளது.மாட்ரிட் நகரின் வீதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதால் செங்கடல் போன்று காட்சியளிக்கிறது.

பட்டாசுகளை வெடித்தும் கார்களின் ஹோர்ன்களை ஒலித்தும் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளால் ஒலியெழுப்பியும் தெருக்களில் நடனமாடியும் ஸ்பெயின் ரசிகர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.மாட்ரிட்டில் உள்ள பூங்காவில் பெரிய திரையில் இறுதி ஆட்டம் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.இதை லட்சக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.ஏராளமான ரசிகர்கள் ஸ்பெயினின் தேசியக் கொடியை தங்கள் முகத்தில் வரைந்தனர்.சிவப்பு நிற சட்டைகளையும் அணிந்திருந்தனர்.

வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் மாட்ரிட்டில் குவிந்துள்ளனர்.பாதுகாப்புப் பணிகளுக்காக 2000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.மாட்ரிட்டின் முக்கிய வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஸ்பெயினின் ரசிகர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

ஸ்பெயினின் பிரதமர் லூயிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.ஆருடம் கணித்த ஆக்டோபஸ் பொம்மைகளையும் ரசிகர்கள் கையில் வைத்திருந்தனர்
.(தினக்குரல் செய்தி)

உலகைக் கவர்ந்த வினோத 'சோதிடன்' _
வீரகேசரி இணையம் 7/13/2010
_
லகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் சிறந்த நட்சத்திரமாகக் கருதப்பட்டவர்.... ஒரு நிமிடம் கூட விளையாட்டுத் திடலில் கால்பதிக்காதவர்... ஆனால் எந்த அணி தகுதி பெறும் என்பதை அச்சொட்டாகக் கணித்துக் கூறுபவர்...

யார் இவர்....?

எல்லோரும் இவரைப் பற்றியே பேசுகின்றனர். அவர் தான் 'போல்' எனும் ஒக்டோபஸ்.

கிளி ஜோசியமல்ல

நாம் அறிந்தது கிளி ஜோசியம். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் 'ஒக்டோபஸ்' ஜோசியம் கொடிகட்டிப் பறக்கின்றது.

ஒக்டோபஸ் சொல்லும் விடயங்களை நம்புவதற்குக் காரணம், அதற்கு ஒன்பது மூளைகளும் மூன்று இதயங்களும் இருப்பதனால் தானோ?

ஜேர்மனியில் உள்ள ஒபர்ஹோசன் நீரியல் பூங்காவில் உள்ள இந்தப் ' போல்' , உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பதைத் துல்லியமாக கணித்துக் கூறியது. அதன் கணிப்பும் உண்மையானது.

அதன் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போமா?

' போல்' 2008 ஆம் ஆண்டு டொரஸ்ட்டில் உள்ள வெய்மத் எனும் இடத்தில் பிறந்துள்ளது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் தனது கணிப்பைக் கூறி அதில் பிரபலமடைந்துள்ள ' போல்' தற்போது ஓய்வு பெறப்போவதாக அறிவிக்கப்படுகிறது.

தான் எதை சரி என நினைக்கிறதோ அதைச் செய்யும் இந்த ஒக்டோபஸ் ஓய்வின் பின்னர் தன்னைப் பார்வையிட வரும் சிறுவர்களுடன் விளையாட ஆசைப்படுவதாக நீரியல் பூங்காவின் பேச்சாளர் தன் ஜா முன் ஜிக் தெரிவித்துள்ளார்.

நீரியல் பூங்காவின் தலைமை அதிகாரி டேனியல் பெய் கூறுகையில்,

"போல் தன்னைப் பார்க்க வரும் விருந்தினர்களைக் கண்டவுடன் வழமைக்கு மாறாகச் செயல்படும். ஆதலால் அதனுடைய தனித்திறமை என்னவென்பதை கண்டறிய முயற்சி செய்கின்றோம்" என்கின்றார்.

போலுக்கு இரண்டு டுவிட்டர் எக்கவுண்டும் ஒரு வலைப்பதிவும் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உலகக் கிண்ணத் தொடரில் ஜேர்மனி அணி பங்கு பற்றிய 6 போட்டிகளின் முடிவுகளையும் சரியாக இது எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் ஜேர்மனி தோல்வியுறும் என ஒக்டோபஸ் எதிர்வு கூறிய பின், ஸ்பெய்னிடம் ஜேர்மனி தோல்வியுற்றது. இதனால் ஜேர்மனி அணி ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

கொலை அச்சுறுத்தல்

இந்த ஒக்டோபஸை பழிவாங்கத் துடிக்கும் ஜேர்மன் கால்பந்தாட்ட அணி ரசிகர்களிடமிருந்து கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருகின்றனவாம்.

அது மட்டுமல்ல.

ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் என சரியாகக் கணித்துக் கூறியமையினால் ஸ்பெயின் அணி வீரர்கள், உலகக் கிண்ணம் போன்ற வடிவத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை ஒக்டோபஸுக்கு வழங்கி அதனை கௌரவப்படுத்தியுள்ளனர் என்றால் அதன் மகிமையை என்னென்பது?

-எம்.எப்.சில்மியா

2010/07/13

காணொளிகளில் உலகக்கிண்ணம்


உலககிண்ணம் 2010 தென் ஆபிரிக்காவின் உத்தியோகபூர்வப் பாடல்



சகீரா-பிரபலமான கொலம்பிய பாடகியின் உலககிண்ண காணொளி "THIS TIME FOR AFRICA"



ஒருமாதகாலம் உலககிண்ணப்போட்டிகளில் உலகம் மூழ்கியிருந்தது. 64 போட்டிகள் 10 அரங்குகளில் நடைபெற்று முடிந்தன. அந்த அரங்குகளை மீண்டும் ஒருதடவை நினைவில் கொள்ள மேலே படத்தில் அழுத்துங்கள்

2010/07/12

இறுதிப்போட்டி பற்றி தமிழ் இதழ்களில்..................!..2


வலம்புரி-யாழ்ப்பாணம்

ஸ்பெயின் அணி "உலக சம்பியன்'
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-12 08:04:24| யாழ்ப்பாணம்]
உலகக்கிண்ண கால் பந்தாட்டத் தொட ரில் ஸ்பெயின் அணி சம்பியனாகி வரலாறு படைத்தது 19ஆவது உலகக்கிண்ண கால் பந்தாட்ட தொடரில் நேற்று நடைபெற்ற இறு திப் போட்டியில் ஸ்பெயின் அணி 1:0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.

தென்னாபிரிக்காவில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த 19ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஜோனஸ் பேர்க் சாக் கர் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் முழு நேரம் வரை எந்த அணியும் கோல் போடவில்லை இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் ஆட் டத்தின் 116ஆவது நிமிடத்தில் ஆன்ட்ரஸ் இனியஸ்டா அட்டகாச மாக ஒரு கோல் அடித்து ஸ்பெயின் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதன் மூலம் ஸ்பெயின் அணி 1:0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி உலக சம்பியன் ஆகியது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற் றில் முதல் முறையாக ஸ்பெயின் அணி சம்பியனாகி வரலாறு படைத்தது. கடைசிவரை போராடிய நெதர்லாந்து தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெற் றது.

ஒக்டோபஸ் வெற்றி

இந்த உலகக் கிண்ண கால் பந்தாட்டத் தொடரில் ஸ்பெயின் அணி சம்பியனாகும் என ஜேர்மன் வாழ் கடல் உயிரினம் ஒக்டோபஸ் அறிவித்தது. இது நடைபெற்றதால் ஒக்டோபஸின் கணிப்பு இத் தொடரில் 100 வீதம் வெற்றி பெற்றுள்ளது.

வண்ணமயமான நிறைவு விழாஉலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர் பிரமாண்டமான கலை நிகழ்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழாவில் தென்னா பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கலந்து கொண்டார்.

உலகக்கிண்ண கால் பந்து தொடர் நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று சாக்கர் சிட்டி மைதா னத்தில் நடந்தது. நிறைவு விழா மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த இறுதிப் போட் டியை பார்க்க 88ஆயிரம் ரசிகர்கள் திரண் டிருந்தனர்.பல நாட்டுத் தலைவர்களும் சாக்கர் சிட்டி யில் முகாமிட்டிருந்தனர். இதனால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

போட்டிக்கு முன்னதாக பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன இதில் பிரபல கொலம் பிய பாடகி கிரா, வாகா வாகா ஆபிரிக்கா என்ற உலகக்கிண்ண தீம் பாடலை பாடி அசத்தினார். பின்னர் லேசர் விளக்குகளால் உலகக் கிண்ண தொடர்களில் விளையாடிய 32 நாட்டு அணிகளின் கொடிகளும் மைதானத் தில் உருவாக்கப்பட்டது ரசிகர்களை கவர்ந் தது. அவ்வப்போது நடந்த வாணவேடிக்கை களும் கண்களைப்பறித்தன.

தொடர்ந்து மைதானத்தில் அழகிய குளம் ஒன்று உரு வாக்கப்பட்டது. அதைச்சுற்றி ஏராளமான ஆபிரிக்க யானைகள் கூட்டம் கூட்டமாக நிற் பது போலவும் தண்ணீர் குடிப்பது போலவும் தத்தருவமான உருவாக்கி காட்டப்பட்டது.இவர்கள் தவிர ஆபிரிக்க கண்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக ஏராள மான இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இறுதியில் தென்னாபிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா பலத்த கரகோ சத்துக்கிடையே மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டது சிறப்பாக அமைந்தது. கறுப்பு நிற கோட் அணிந்து முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவுடன் அவர் மைதானத்துக்குள் வந்தார். அவரை பார்த் ததும் சாக்கர்சிட்டியில் பலத்த ஆரவாரம் ஏற்பட்டது. இத்துடன் நிறைவு விழா நிகழ்ச்சிகள் முடிபடைந்தன.


தமிழ் மிரர்-கொழும்பு

முதன்முறையாக கிண்ணம் வென்றது ஸ்பெயின்

விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டியின் இறுதி நேரத்தில் ஒரு கோலினைப் போட்டு உலகக்கிண்ணத்தினைச் சுவீகரித்திருக்கிறது ஸ்பெயின்.

19ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன. கடந்தமாதம் 11ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிய கால்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் 11ஆம் திகதியுடன் நிறைவடைந்திருக்கிறது.

எதிர்பார்க்கப்பட்ட பல அணிகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன. இரு அணிகளுமே சமபலம் கொண்ட அணிகள். இதற்கு முன்னர் இரு அணிகளும் 9 தடவைகள் சந்தித்திருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருக்கிறது. ஆகையினால் இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

நெதர்லாந்து அணி மூன்றாவது தடவையாக உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கிறது. 1974ஆம் ஆண்டு ஜேர்மனியுடனும் 1978ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா அணியுடனும் இறுதிப் போட்டியில் சந்தித்து தோல்வியை தழுவியிருந்தது. 32 வருடங்களின் பின்னர் நெதர்லாந்து அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது. இதிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது நெதர்லாந்து. இதேவேளை ஸ்பெயின் அணி முதன்முறையாக கால்பந்தாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

இம்முறை இறுதிப் போட்டியில் 8ஆவது முறையாக ஐரோப்பிய அணிகள் மோதியிருந்தன. இதற்கு முன்னர் பிரேஸில் 5 தடவைகள், இத்தாலி 4 தடவைகள், ஜேர்மனி 3 தடவைகள், உருகுவே, ஆர்ஜென்டினா ஆகிய அணிகள் தலா இரு முறையும் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் உலகக்கிண்ணத்தினை வென்றிருந்தன.

விறுவிறுப்பாக சென்ற இறுதிப்போட்டியின் முதல் பாதியிலும் இரண்டாவது பாதியிலும் கோல்கள் எதுவும் போடப்படவில்லை. மேலதிகமாக வழங்கிய 30 நிமிடங்களின் 27ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் முன்கள வீரர் அன்ட்ரெஸ் இனிஸ்ட்ரா அபாரமாக கோல் ஒன்றினை அடித்ததன் மூலம் தனது அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

இறுதிப் போட்டியில் 12 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டமை முக்கிய அம்சமாகும். அதேவேளை நெதர்லாந்தின் ஹெய்டிங்கா சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டமையும் முக்கிய திருப்பமாக அமைந்திருந்தது.




தினக்குரல் - (வடக்கு)

2010/07/11

25ம் நா ள் - - - - இ று தி மோ த ல்



64/64 நெதர்லாந்து எதிர் ஸ்பானியா 0:1 (0:0)
(நேரநீடிப்பு)

கோல் விபரம்:INIESTA (117)

மஞ்சள் அட்டை: நெதர்லாந்து 8: ஸ்பானியா 3
சிவப்பு அட்டை நெதர்லாந்து :1


ஒருமாத காலமாக இடம்பெற்ற கால்பந்தாட்ட கோலாகலத்தின் உச்சக்கட்டம் இன்று. உலகின் அனைத்துக் கண்டங்களிலுமிருந்து 32 நாடுகள் போட்டிக்கு வந்தன. ஒவ்வொன்றாக தோற்று வெளியேற இறுதியில் இறுதி மோதலில் மோத இரு ஐரோப்பிய அணிகள் . இதுவரை தோற்காமல் இறுதிப்போட்டிக்கு வ்ந்திருக்கும் நெதர்லாந்து , முதல் போட்டியில் தோற்று பின் வெற்றிகளைக் குவித்த ஸ்பானியாவுடன் மோத உள்ளது. இரண்டுமே இதுவரை உலககிண்ணத்தினை வெற்றி கொள்ளாதவை. எனவே உலககிண்ண வெற்றி அணியில் இன்று ஒரு நாடு இணையப்போகின்றது.

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் இவ்விறுதிப்போட்டியில் பங்கு கொண்டமை முக்கியமான அம்சமாக இருந்தது. பல வெளிநாட்டுத் தலைவர்கள், பிரமுகர்கள், நெதர்லாந்து, ஸ்பானிய அரச குடும்பத்தவர்கள் என

ஏராளமானோர் இறுதியாட்டம் காண சமூகமளித்திருந்தனர்.
FIFAதலைவருடன் விளையாட்டரங்குக்கு வந்த தென்னாபிரிக்க அதிபர் வீரர்களுக்கு கைலாகுகொடுத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார். போட்டிக்கு நடுவராக இங்கிலாந்து நாட்டின் HOWARD WEBB. விளையாட்டரங்கு தென் ஆபிரிக்காவின் மிகப்பெரிய 90 ஆயிரம்பேரை உள்ளடக்கக்கூடிய SOCCER CITY STADIUM-JOHANNESBERG ஆகும்.

நெதர்லாந்து சம்பியன் ஆனால் அனைத்துப்போட்டிகளிலும் வென்ற 2வது அணியெனும் பெருமை பெறும். பிரேசில் 1970ல் அவ்வாறு அனைத்திலும் வென்று சாதனை படைத்துள்ளது. ஸ்பானியா சம்பியனானால் ஐரோப்பிய சம்பியன், உலககிண்ணச் சம்பியன் என இரு தகமைகளைச் சமகாலத்திக் கோட 3வது அணியாக மாறும். ஏற்கனவே இப்பெருமையை ஜேர்மனியும் பிரான்சும் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலவரத்தில் போட்டி ஆரம்பமானது.

போட்டி தொடங்கியதிலிருந்து ஸ்பானியாவீரர்கள் ஆட்டத்தில் ஆதிக்கம் கொண்டிருந்தார்கள். 10 நிமிடத்தில் 40% : 60% என களநிலை நிலவியது. கோல்கள் இன்றி விதிமீறிய விளையாட்டும் 5 மஞ்சள் அட்டைகளுமாக முன்பாதி ஆட்டம் முடிவடைந்தது. முன்பாதியில் 56% பந்து இருப்பு ஸ்பானியா வசமே இருந்தது. பின் பாதி தொடங்கி யபின்னும் மஞ்சள் அட்டை கொடுத்தல் தொடர்ந்தது. அடுத்தடுத்து நெதர்லாந்தின் 2 வீரர்கள் அட்டை வாங்கினர். 61ம் நிமிடத்தில் நெதர்லாந்தின் ரொபன் கோலடிக்கும் ஓர் அரிய வாய்ப்பை தவறவிட்டார்.

90நிமிடங்கள் முடிந்தும் கோல் எதுவும் இல்லாமையால் மேலதிகமாக 30 நிமிடநேர விளையாட்டுக்கு போட்டி நீடிக்கப்பட்டது. தொடர்ந்தும் ஸ்பானியாவே போட்டியில் பந்தினை விளையாடியதாகக் கணிக்கப்பட்டது. நெதர்லாந்து 6 அட்டைகளை வாங்கிய நிலையில் மேலதிக நேரத்தை எதிர்கொண்டது. நெதர்லாந்து 109 ம் நிமிடத்தில் ஒரு சிவப்பு அட்டையை வாங்கியது. 2 நிமிடம் கழித்து 1 மஞ்சள் அட்டை என மிக நெருக்கடிக்குள் நெதர்லாந்து வீரர்கள் அழுத்தங்களுக்கு ஆளாயினர். 1974,1978 போலவே 2010ம் அமையும் நிலைஉருவானது. ,ஸ்பானியாவிடம் இறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது.

117ம் நிமிடத்தில் ஸ்பானியா கோலடித்தது.அடித்தவர் இனிஎஸ்ரா.
அவரே ஆட்டத்தின் நாயகனாக தெரிவாகினார். ஸ்பானியா தோல்வியில் தொடங்கி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. அவர்களது விளையாட்டுத் தந்திரோபாயம் மிக வித்தியாசமானது. அதிக கோல்களை அவர்கள் அடிப்பதில்லை. தங்களுக்குள் அதிகநேரம் பந்தை விளையாடி காலத்தை இழுத்தடித்து, எதிரணியினர் கோலடிப்பதனை தடுத்துக்கொண்டிருந்து விட்டு , இறுதி நேரத்தில் ஒருகோலை அடித்து வெற்றியை வசப்படுத்திவிடுவார்கள். இவ் உலககிண்ண சுற்றுப்போட்டியில் அவர்கள் ஆடிய 7 ஆட்டங்களில் 8 கோல்களை மட்டுமே (ஜேர்மனி 16 கோல்கள் அடித்தது)அடித்துள்ளனர். எதிராக 2 கோல்களை பெற்றுள்ளனர். (சுவிஸ்1+சிலி1)

இந்த தடவையே அவர்கள் அரையிறுதி, இறுதி என முன்னேறிச் சாதனை புரிந்துள்ளனர்.

இறுதிப்போட்டி பற்றி தமிழ் இதழ்களில்..................!








தென்னாபிரிக்காவில் கோலாகலம் - உலக கால்பந்துக் கிண்ணம் யாருக்கு? நெதர்லாந்து, ஸ்பெயின் இன்று மோதல்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-11 08:50:33| யாழ்ப்பாணம்]
உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்துக்கு வந்து விட்டது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்க இறுதிப் போட்டி இன்று ஜோகனஸ் பேர்க் சாக்கர்சிட்டி மைதானத்தில் நடைபெறு கிறது. உலகக்கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான இந்த ஆட்டத்தில் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே சம பலம் பொருந்தி யது என்பதால் இறுதிப் போட்டி மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படு கின்றது. இரு அணிகளும் முன்னணி நாடுகளை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றும் இறுதி ஆட்டத்துக்கு நுழைந்துள்ளன. ஐரோப்பிய சம்பியனான ஸ்பெயின் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. 1974ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியிடமும் 1978ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா அணியிடமும் தோல்வி யடைந்து கிண்ணத்தை இழந்தது.

இரு அணிகளுமே முதல் முறையாக உலகக்கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன. ஸ்பெயின் நெதர்லாந்து அணி களில் உலகின் தலை சிறந்த வீரர்கள் உள்ள னர். தங்கப் பாதணியை பெறுவதில் ஸ்பெ யின் அணியின் டேவிட் வில்லாவும் நெதர் லாந்து அணியின் வெஸ்லி ஸ்டைனரும் முனைப்புடன் உள்ளனர். இருவரும் தலா 5 கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளனர். ஐரோப்பா கிண்ணத்தை இரண்டு முறை கைப்பற்றிய (1964, 2001) ஸ்பெயின் அணி யின் வி றொனான்டஸ் டொரஸ், பெட்ரோ, இனேஸ்டா, பி அலோன்சா, செர்ஜியோ ரமோஸ் போன்ற உலகின் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

அணித்தலைவரும் கோல்காப்பாளரு மான இகேர் கேசிலாஸ் ஸ்பெயின் அணி யின் முதுகெலும்பாக உள்ளார். அவர் உல கின் தலைசிறந்த கோல் காப்பாளருமாவார். ஜேர்மனி அணிக்கெதிராக அரையிறுதியில் கோல் வாய்ப்பை இரண்டு முறை தடுத்தார். 1988ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை யை வென்ற நெதர்லாந்து அணி இத் தொட ரில் தோல்வி எதனையும் சந்திக்காமல் இறு திப் போட்டிக்கு நுழைந்துள்ளது.அந்த அணியில் ரோபன், டிர்க்கியூட், ரொபின் வான்பெர்சி, அணித்தலைவர் ஜிலோனி வானபிரோன் ஹோஸ்ட், மார்க் பொம்மல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

32 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள நெதர்லாந்து அணி இம் முறை கிண்ணத்தை நழுவ விட்டு விடக் கூடாது என்ற நோக்கில் உள்ளது. ஸ்பெயின் அணி நடுக்களத்திலும் பின் களத்திலும் வலுவாகவுள்ளது. நெதர்லாந்து அணி முன்களத்திலும், நடுக்களத்திலும் பல மாகவுள்ளது. இரு அணிகளும் தாக்குதல் ஆட் டத்தில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு இறுதிப் போட்டி ஆரம்பமாகிறது.

உலககிண்ணத்தை வெல்வது யார்? ஸ்பெயின், நெதர்லாந்து மோதல்
7/11/2010 11:31:03 AM -உலக உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.நீயா? நானா? என்ற விறுவிறுப்புடன் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.எந்த அணி வெற்றி பெறும் என்ற கணிப்புகள் பரவலாக பல்வேறு விலங்குகளிடம் இடம்பெற்றன.

உலக்ககிண்ண உதைப்பந்தாட்ட போட்டி முடிவுகளை சரியாக எதிர்வு கூறிய போல் கடல் வாழ் உயிரினம் உலகம் முழுவதும் பிரசித்திபெற்றுள்ளது. இதே போன்று சிங்கப்பூரிலுள்ள கிளியொன்றும் உலகக்கிண்ணத் தொடரின் பல பெறுபேறுகளை சரியாக எதிர்வுகூறி வந்துள்ளது.மணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிளி பிரபல்யம் ஆகவில்லை..

இருப்பினும் அக்டோபஸின் கணிப்பு சரியாகும் என்ற என்ற எதிர்பார்ப்புடன் ஸ்பெயின் உதைப்பநாதாட்ட ரசிகர்களும் ,அக்டோபஸ்ஸின் கணிப்பிற்கு ஜேர்மன் அணி சவாலாக விளையாடும் என்ற எண்ணத்துடன் நெதர்லாந்து ரசிகர்களும் இன்றை போட்டிகளை காண ஆவலாக உள்ளனர்.


இன்று உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி-குவியும் தலைவர்கள், பிரபலங்கள்

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 11, 2010, 13:37

Leaders and Stars jet to South Africa for WC Final


ஜோஹன்னஸ்பர்க்: ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியைக் காண உலகத் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

இன்று நள்ளிரவு நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஜோஹன்னஸ்பர்க்கின் புறநகரான சோவிடோவில் உள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த விறுவிறுப்பான போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியைக் காண பல்வேறு உலகத் தலைவர்கள், பல்துறைப் பிரபலங்கள் ஜோஹன்னஸ்பர்க் வந்து குவிந்துள்ளனர்.

நேரடியாகவும், டிவிகள் மூலமும் இறுதிப் போட்டியை 500 மில்லியன் பேர் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்க அதிபர் [^] ஜேக்கப் ஜூமா கூறுகையில், ஒரு வரலாற்றுப் படைப்பின் இறுதிக்கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். ஆப்பிரிக்க கண்டத்தின் முதல் உலகக் கோப்பைக் கால்பந்து பெரும் வரலாறு படைத்துள்ளது. ஒட்டுமொதத் ஆப்பிரிக்கர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளது என்றார் பெருமையுடன்.

தொடர்ந்து அவர் கூறுகையில், நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையிலான போட்டியைக் காண அனைவரும் ஆர்வத்துடன் உள்ளோம். மிகவும் வெற்றிகரமான முறையில் இந்த போட்டித் தொடர் முடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் உள்ளோம் என்றார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் முதல் உலகக்கோப்பைப் போட்டித் தொடர் முடியும் வரை ஆப்பிரிக்க மக்கள் [^] கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.



சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்? நீயா, நானா? மோதலில் நெதர்லாந்து-ஸ்பெயின்

First Published : 11 Jul 2010 12:00:00 AM IST

ஜோகன்னஸ்பர்க், ஜூலை 10: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.உலகின் 6 கண்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின்.1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடமும், 1978-ம் ஆண்டு ஆர்ஜென்டீனாவிடமும் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்ட நெதர்லாந்து அணி தற்போது மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுள்ளது.இதனால் இரு அணிகளும் உலகக் கோப்பையை வெல்லும் துடிப்போடு இறுதி ஆட்டத்தில் களமிறங்குகின்றன.எச் பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்பெயின் முதல் சுற்றான லீக் ஆட்டங்களில் தட்டுத்தடுமாறி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் இரண்டாவது சுற்றில், வடகொரியாவுக்கு எதிராக கோல் மழை (7 கோல்கள்) பொழிந்த பலம் வாய்ந்த போர்ச்சுகல்லை 1-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றது. காலிறுதியில் பராகுவேயை எதிர்கொண்ட ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஒன்றிரண்டு கோல்கள் அடித்தே காலிறுதி வரை முன்னேறிய ஸ்பெயின், அரை இறுதியில் பலம் வாய்ந்த ஜெர்மனியுடன் மோதியது.இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தபோது வழக்கம்போல் ஒரு கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ஸ்பெயின்.இறுதிஆட்டம் வரை முன்னேறியுள்ள ஸ்பெயின் லீக் சுற்று நீங்கலாக மற்ற சுற்றுகளில் தலா ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளது. ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் வியூகம் வகுத்து ஆடிய விதம் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.அதேபோன்று இறுதி ஆட்டத்திலும் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டங்களில் இக்கட்டான நேரங்களில் கோல் அடித்து அணியை வெற்றிப்பாதையில் அழைத்து வந்த டேவிட் வில்லா, இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றித்தேடித்தருவார் என்று எதிர்பார்ப்பு ஸ்பெயின் கால்பந்து ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.டேவிட் வில்லாவுடன் ஷேவி அலோன்ஸô, ஆண்ட்ரே இனியெஸ்டா, கார்லஸ் புயோல், ஜெல்சன் பெர்னாண்டஸ் போன்ற முன்னணி வீரர்களும் கை கோர்த்துள்ளதால் நெதர்லாந்து கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். லீக் சுற்றில் ஆரம்பித்து ஓர் ஆட்டத்தில் கூட தோற்காமல் பலம் வாய்ந்த அணிகளை வெற்றி கண்டு இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது நெதர்லாந்து.லீக் சுற்றில் இ பிரிவில் இடம்பெற்றிருந்த நெதர்லாந்து 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று எளிதாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது சுற்றில் 2-1 என்ற கணக்கில் ஸ்லோவேகியாவை வென்ற நெதர்லாந்து, காலிறுதியில் உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பிரேசிலை எதிர்கொண்டது.இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் பிரேசிலுக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது நெதர்லாந்து. இதைத்தொடர்ந்து அரை இறுதியில் 3-2 என்ற கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளது நெதர்லாந்து. தான் ஆடிய எல்லா ஆட்டங்களிலும் இரண்டு, மூன்று கோல்களை அடித்து அற்புதமாக ஆடி வந்துள்ள இந்த அணி. முன்னணி வீரர்கள் வெஸ்லி ஸ்நீஜ்டெர், ராபன் அர்ஜென், ராபினவான் பெர்ஸி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.கடந்த ஆட்டங்களில் எதிரணிகளுக்கு கடும் சவாலை அளித்து வந்த இந்த முன்னணி வீரர்கள், ஸ்பெயின் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத நிலையில் இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற கனவில் உள்ளன. இரு நாட்டு ரசிகர்களும் மிகவும் ஆர்வத்தோடு இறுதி ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.டென்னிஸ் ஜாம்பவான் ஸ்பெயினின் ரஃபேல் நடால், தமது நாட்டு அணி வெல்லும் என்ற நம்பிக்கையில் இறுதி ஆட்டத்தைக் காண்பதற்காக ஜோகன்னஸ்பர்க் வந்துள்ளார்.மேற்கு ஜெர்மனியில் உள்ள ஆக்டோபஸ் பால், உலகக் கோப்பையை ஸ்பெயின் வெல்லும் என்றும், சிங்கப்பூர் கிளி மணி நெதர்லாந்து வெல்லும் என்றும் ஆருடம் கூறியுள்ளன. இதுவும் கால்பந்து ரசிகர்களிடையே பரபரப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளன.ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் தங்கள் நாட்டு வீரர்களுடைய ஜெர்சியின் வண்ணங்களில் ஆங்காங்கே கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதனால் இருநாடுகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது.நீயா, நானா? மோதலில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது இறுதிஆட்டத்தில் பங்கேற்கும் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மட்டுமல்ல; ஆருடம் கூறியுள்ள ஜெர்மனியின் ஆக்டோபஸ் பாலும், சிங்கப்பூர் கிளி மணியும் தான்.இறுதி ஆட்டத்திற்கு பிறகு புகழின் உச்சத்தை அடையப்போவது சாம்பியன் பட்டம் வெல்லும் அணி மட்டுமல்ல; ஆருடம் கணித்துள்ள இருவரில் ஒருவரும்தான்.



2010/07/10

24ம் நாள்- மூன்றாம் இடத்துக்கு மோதல்



63/64
ஜேர்மனி
எதிர்
உருகுவே
3:2(1:1)


Thomas MUELLER (19')
Edinson CAVANI (28')
Diego FORLAN (51')
Marcell JANSEN (56')
Sami KHEDIRA (82')

இன்றைய மூன்றாம் இடத்துக்கான போட்டியில் 3:2 என்கிற கணக்கில் ஜெர்மனி வெற்றிபெற்றது. ஜேர்மனியின் முல்லர் முதல் கோலை 19ம் நிமிடத்தில் அடித்தார். தொடர்ந்த 9நிமிட நேரத்தில்( 28ம் நிமிடத்தில்) உருகுவேயின் கவானி ஒருகோலை அடித்து சமநிலைப்படுத்தினார். உருகுவேயின் நட்சத்திரவீரர் போர்லான் 51ம் நிமிடத்தில் அடுத்த கோலை அடித்து உருகுவேயை முன்நிலைக்கு இட்டார். ஆட்டம் மேலும் பரபரப்படைந்தது. அடுத்த 5 நிமிடத்தில் ஜேர்மனியின் ஜான்சன் ஒருகோலை அடிக்க மீண்டும் சமநிலை உருவானது. மேலதிக நேர விளையாட்டு, தண்டனை உதை என ஆட்டம் மேலும் நீளுமா என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தொடர்ந்து 25 நிமிடங்கள் இருதரப்பும் வெற்றியைப் பெறக் கடுமையாக மோதின. 82ம் நிமிடத்தில் ஜேர்மனியின் கெடீரா ஒருகோலை அடித்து ஜேர்மனியை வெற்றிநிலைக்கு கொண்டு சென்றார். மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இறுதி வினாடியில் கூட உருகுவேக்கு அரிய சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. ஆனால் ஜேர்மனிய வீரர்கள் அதனைத் தடுத்து வெற்றியைத் தமதாக்கினர். 18வது உலககிண்ணப்போட்டியைப் போலவே ஆறுதல் பரிசாக ஜேர்மனி 3ம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. ஐந்து நாடாக போட்டியில் நுழைந்த கால்பந்தாட்டப் போட்டியின் ஆதிக்க தென்னமெரிக்க நாட்டினர் நாலாவ்து இடத்தினை மட்டுமே பெற்று வெளியேறினர்.

ஜேர்மனியின் முல்லர், உருகுவேயின் போர்லான் ஆகியோர் இன்றடித்த கோலுடன் 5 கோல் என தங்கள் நிலையைப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே
நெதர்லந்தின் சினைடர், ஸ்பானியாவின் விலா அகியோரும் 5கோல் என்கிற கணக்கில் உள்ளனர். இவர்களில் ஒருவர் 6 வது கோலை அடிக்கும் பட்சத்தில் அவர் தங்கக்காலணியை வெற்றிகொள்ள முடியும்.

ஜேர்மனியின் அணியில் முக்கியமான வீரர்கள் பங்குகொள்ளவில்லை. அணித்தலைவர் லாம், பொடொல்ஸ்கி, குளோச, காப்பாளர் நொயர் என்பவர்கள் ஆடாமல் ஏனைய வீரர்கள் விளையாடச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஜேர்மனியின் பயிற்றுவிப்பாளர் ஜோகிம் லோ இளவயது வீரர்களை களமிறக்கி உலககிண்ணம்2010ஐ எதிர்கொண்டார். அவர்களும் சிறப்பாகவே விளையாடினர். சுற்றுபோட்டியில் மிக அதிகமாக 16 கோல்களை அடித்து அவர்கள் முன்னிலையில் நிற்கின்றனர். அவர்களின் கோல்களை விஞ்சுவது சாத்தியமில்லை. ஏனெனில் அடுத்து நிற்பவர் நெதர்லாந்து அணியினர். அவர்களில் கோல் கணக்கு 12. ஒருபோட்டி மட்டும் அதுவும் இறுதிப்போட்டி மட்டுமே கைவசம் உள்ளது. அவர்கள் 5கோலடிக்க ஸ்பானியர்கள் நிச்சயம் அனுமதிக்கப்போவது இல்லை.

ஜேர்மனிய இளம் வீரகளுக்கு நன்றி கூறி ஒரு நாளிதழ் வெளியிட்ட படம்

நடுவர்: Benito ARCHUNDIA (மெக்சிக்கோ)
அட்டைகள்: மஞ்சள்
ஜேர்மனி 3/உருகுவே 1
விளையாட்டரங்கு: Nelson Mandela Bay/Port Elizabeth - Port Elizabeth Stadium


மூன்றாம் இடத்துக்கு மோதல்- உருகுவேக்கு எதிராக ஜேர்மனி

KLOSE-உலக சாதனையை நோக்கி
இறுதி ஆட்டம் நாளை நடைபெறுவதற்கு முன்பாக மூன்றாம் இடத்தினை பெறு அணியை அதாவது அரையிறுதியில் தோற்றுப்போன அணிகள் மோதுகின்ற போட்டி இது. 2006 உலககிண்ணம் ஜெர்மனியில் 3ம் இடம்பெற ஜெர்மனி அணி
25வது பிறந்தநாளில் GOMEZஇன்று

தென்னமெரிக்காவில் எஞ்சியுள்ள அணியான உருகுவேயுடன் விளையாடுகின்றது. இரண்டு நாடுகளுமே முன்னர் உலக நாயகன்களாக விளங்கியவை.
MUELLER -சிவப்பு அட்டை தடை விலகல்
ஜேர்மனியின் அணிக்கு 4 கோலடித்தவரும் கடந்த அரையிறுதிப்போட்டியில் சிவப்பு அட்டை பெற்தனால் ஆடாதவருமான முல்லர் விளயாடுகிறார் என்பது வாய்ப்பாக இருந்தலும் நட்சத்திரவீரர் குளோச முதுகுவலியால் அவதிப்படுவதனால் விளையாடுவது கடினம் என்கிற விடயம் பாதகமாக உள்ளது உலக சாதனையை கோல்கணக்கில் சமன் செய்ய அவருக்கு ஒரு கோல் மட்டுமே தேவை என்பதனால் அவர் இப்போட்டியில் பங்குகொள்வார் எனவே
SUAREZ-சிவப்பு அட்டை தடை விலகல்

எதிர்பார்க்கப்படுகின்றது.
உருகுவேக்கும் முன்னைய போட்டியில் சிவப்பு அட்டையால் ஆடாமலிருந்த முன்னணி வீரர் சுரேஜ் இந்த ஆட்டத்தில் விளையாடுகின்றார் என்பது
சாதகமான அம்சமாக உள்ளது.


2010/07/09

இறுதிப்போட்டியில் இரு ஐரோப்பிய அணிகள்!

இன்னும் இரு தினங்களில் உலக கிண்ணப்போட்டிகள் நிறைவுற்றுவிடும்.
ஒரு புதிய நாடு உலககிண்ணத்தினை வென்று செல்ல இருக்கின்றது.
அது நெதர்லாந்தாகவோ அன்றேல் ஸ்பானியாவாகவோ இருக்கப்போகின்றது.
இதுவரை 7நாடுகள் உலககிண்ணத்தைச் வென்றிருக்கின்றன. எட்டாவதாக
மேற்குறித்த நாடுகளில் ஒன்று அணிசேர இருக்கின்றது.

உலககிண்ணம் 2010க்கு தென் அமெரிக்காவிலிருந்து பங்கு கொண்ட 5 அணிகளும் அரைக்காலிறுதிக்குத் தேர்வாகிச் சாதனை படைத்தன.அவற்றில் சிலி தவிர்ந்த நான்கு அணிகள் கால் இறுதிக்குள் நுழைந்தன.மிகவும் பிரபல்மான சாதனை நாடாக இருக்கின்ற பிரேசில் இம்முறை கால் இறுதியுடன் வெளியேறியது. அது போலவே ஆர்ஜன்ரீனாவும் கால் இறுதியுடன் வெளியேறியது. 13 நாடுகளாக போட்டிக்கு வந்த 13 ஐரோப்பிய நாடுகளில் மூன்று மட்டுமே காலிறுதிக்குள் வர முடிந்தது. ஆபிரிக்காவிலிருந்து கானா எனக் காலிறுதிக்கு எட்டு நாடுகள் தெரிவாகின.

அரையிறுதிப் போட்டிகளில் ஐரோப்பிய நாடுகளில் மூன்றும் தெரிவாகி அவற்றில் இரண்டு அணிகளான நெதர்லாந்தும் ஸ்பானியாவும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. 5-4-1 என ஒவ்வொரு சுற்றிலும் தென்னமெரிக்க நாடுகள் சுருங்கி 3வது அல்லது 4வது இடத்துக்கு மட்டுமே அவற்றில் ஒன்றான உருகுவேக்கு வர வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. நாளை அது எந்நிலை பெறும் என்பது தெரிந்துவிடும்.

இப்போட்டியின் சில முக்கிய அம்சங்கள்:

  1. ஜேர்மனி உலககிண்ணப்போட்டிகளில் ஆகக்கூடிய ஆட்டங்களில் பங்கேற்ற அணியாக சாதனை புரிகிறது. அது நாளை ஆடும் ஆட்டம் 99வது ஆட்டமாகும்.(பிரேசில் 97 தடவைகள்)
  2. 48 ஆண்டுகளில் அரையிறுதியில் பங்கேற்ற அணிகளில் இளவயது அணி ஜேர்மனிய அணியாகும். அதன் வயதுச் சராசரி 25வருடம் 299 நாட்கள். இதற்குமுன் செக். அணி 25 வரு.145 நாட்களாக் 1962ல் விளையாடியது.
  3. உலககிண்ணப்போட்டிகளில் இறுதிச் சுற்று வரை ஆடிய நாடுகள் இதுவரை 11 மட்டுமே. 12வது நாடாக ஸ்பானியா இணைகின்றது.
  4. உலககிண்ணப்போட்டிகளில் நெதர்லாந்தின் சினைடர் 4 போட்டிகளில் (9+24+57+61ம் ஆட்டங்கள்) ஆட்டத்தின் நாயகனாகத் தெரிவாகியுள்ளார். இதுவரை தனது 6 ஆட்டங்களிலும் தோல்வியடையாத அவ்வணி ஒவ்வொரு போட்டிக்கும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளது.(பெர்சி 44, றொப்பன் 54)
  5. இதுவரை நடந்த 6 போட்டிகளிலும் வென்ற ஒரேயொருநாடு நெதர்லாந்து. இதுவரை நடந்த போட்டிகளில் அதிக மஞ்சள் அட்டை(15) வாங்கிய நாடும் நெதர்லாந்து. அதிக தடவை விதிகளை (FOULS 98) மீறி விளையாடி யவர்களும் அவர்களே. கையால் பந்தை அடித்த வகையிலும் நெதர்லாந்து முன்னணியில் உள்ளது. 10 தடவை அது தொட்டுள்ளது.
  6. சரியான முறையில் சகவீரருக்கு பந்தை கொடுத்தவகையில் (PASSES COMPLETED) ஸ்பானியா 3387 தடவை என முன்னணியில் உள்ளது. 2வது ஜேர்மனி...2472 3வது நெதர்லாந்து..2434.
  7. அதிக கோல்கள் அடித்தவர் வரிசை =ஜேர்மனி 13, நெதர்லாந்து 12, ஆர்ஜன்ரீனா 10
  8. அதிக கோல்கள் பெற்றவர்கள் வரிசை= வடகொரியா 12, தென்கொரியா 8, ஸ்லவாக்கியா 7

2010/07/07

23ம் நாள்- கடைசி அரை இறுதி மோதல்

62/64 ஜேர்மனி எதிர் ஸ்பானியா 0:1(0:0)
Puyol 73







இரண்டாவது அரையிறுதி. மோதுபவர்கள் மும்முறை கிண்ணம் கண்ட ஜேர்மனி. எதிராக இதுவரை கிண்ணத்தை தரிசித்திராத ஸ்பானியா. இந்த உலககிண்ணத்தில் 13கோல் அடித்து முன்னணியில் உள்ள ஜேர்மனி 6கோல்களை மட்டுமே அடித்திருக்கும் ஸ்பானியாவுடன் இந்த அரையிறுதியில் மோதியது. ஆயினும் உலகத்தர இறுதிக்கணிப்பில் ஸ்பானியா 2ம் இடத்திலும் ஜேர்மனி 6ம் இடத்திலும் இருந்தன.


போட்டி விறுவிறுப்பாக அரம்பித்தது என்றாலும் ஆதிக்கம் செலுத்தி ஆடியது ஸ்பானியாவே. 20அது நிமிடம் வரை அது 65% பந்தை விளையாடியது. முதல் பாதிவரை யாரும் கோலடிக்கவில்லை. அதுபோலவே எவரும் எச்சரிக்கை அட்டை வாங்கவில்லை. ஸ்பானியர்கள் அதிகம் கோலுக்கு முயற்சிக்க அதனை பாதுகாப்பவரளாகவே ஜேர்மனியர் காணப்பட்டனர். பந்து இருப்புநிலை 43%:57% ஆக முற்பாதி முடிவுற்றது.




2வது பாதி தொடங்கி 10 நிமிடத்தில் ஜேர்மனி தனது வீரர் பேரங்கை மாற்றி ஜன்சனை களமிறக்கியது. 58வது நிமிடத்தில் ஸ்பானியா அருமயான ஒரு கோல்வாய்ப்பை தவறவிட்டது. ஆயினும் 11 தடவைகள் கோலுக்கு அது முயற்சிக்க ஜேர்மனி முயற்சித்தது 2 தடவைகள் மட்டுமே.
73ம் நிமிடத்தில் கோணர் அடியொன்றைப் பயன்படுத்தி கோல் ஒன்றை ஸ்பானியா அதிரடியாக இறக்கியது. தலையால் அடித்தவர் புயோல். இப்போட்டியின் இன்னொரு முக்கிய அம்சம் எவிவிதமான அட்டைகளும் வழங்கப்படாமையாகும்.

அரையிறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பானியா இறுதிப்போட்டியில் நெதர்லாந்தை 11ம் திகதி சந்திக்கிறது. அனைத்து முன்னாள் சம்பியன்களும் வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை உலககிண்ணத்தினைத் தரிசிக்காத நெதர்லாந்தும் ஸ்பானியாவும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. நெதர்லாந்து 2 தடவைகள் இறுதிப்போட்டியில் விளையாடித் தோற்றுள்ளது. ஸ்பானியா இம்முறைதான் அரையிறுதிக்கே தேர்வானது. அதன் முதல் இறுதிப்போட்டியில் அது நெதர்லாந்தை வென்று சரித்திரம் படைக்குமா என்பது இன்னும் நான்கு
நா ட்களில் முடிவாகிவிடும்.

நடுவர்:Viktor KASSAI/கங்கேரி
அட்டைகள்:
மஞ்சள்:
ஜேர்மனி:0 ஸ்பானியா :0
விளயாட்டரங்கு:Durban Stadium. DURBAN